Friday 29 February 2008

சுஜாதாவுக்கு ஒரு இரங்கல் மடல்

தமிழில் விஞ்ஞான இலக்கியத்தில் சிற்பிகளை செதுக்கிய இந்த உளி உடைந்ததேன் ?
எங்களின் ஏன் ? எதற்கு ? எப்படி ? என்ற கேவிகளுக்கு விடை தர யார் வருவார் ?

இன்னொரு இனிய இயந்திரவை யார் படைப்பார் ?

இவர் மறைவுக்கு அந்த ஜீநோ கண்நீர் விடுமா ?

இனி எங்கள் கண்முன் ஸ்ரீரங்கத்து தேவதைகளை யார் கொண்டு வருவார் ?

தமிழ் உலகத்திற்கு இவர் தந்த எளிய விஞ்ஞான படைப்புக்களை இனி யார் தருவார்?

பூக்குட்டியை எங்கள் மனதின் நீங்காத இடத்தில் வைத்த இவர் எங்களை நீங்கி சென்றதேன் ?

இவருடன் சேர்ந்து கணேஷ் மற்றும் வசந்த் இருவருமல்லவா மறைந்துவிட்டார்கள் !!!

சிலிகான் சில்லு புரட்சிகளை தமிழில் எங்களுக்கு இனி யார் தருவார் ?
இவர் கற்றதை நாங்கள் அல்லவா பெற்றோம் ! இனி நாங்கள் பெறுவதற்கு யார் கற்று எழுத்தில் அறுசுவை விருந்து படைபர்கள் ?

நாங்கள் இழந்தது ஒரு தமிழ் எழுதாளரை மட்டுமல்ல, விஞ்ஞான உலகத்தை எங்கள் தமிழில் எளிமையாக்கி எங்கள் அறிவுக்கு மட்டுபட வைத்த ஒரு அறிவு சுடரை !

இவர் மறைவுக்கு எங்கள் அஞ்சலி !